என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலி
Byமாலை மலர்15 July 2021 9:42 AM GMT (Updated: 15 July 2021 9:42 AM GMT)
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலத்த காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விருதுநகர்:
சிவகாசி பழனியாண்டவர் தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 70). இவர் சாத்தூர் அருகே சிந்நபள்ளி கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு பேன்சி ரக பட்டாசு வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் இங்கு பணியாற்றிய சுந்தரகுடும்பன்பட்டியைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் (25) பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக சிவகாசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முகேஷ் கண்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாத்தூர் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி பழனியாண்டவர் தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 70). இவர் சாத்தூர் அருகே சிந்நபள்ளி கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு பேன்சி ரக பட்டாசு வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் இங்கு பணியாற்றிய சுந்தரகுடும்பன்பட்டியைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் (25) பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக சிவகாசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முகேஷ் கண்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாத்தூர் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X