என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 84 பேர் பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 84 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 1,232 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 631 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 48 ஆயிரத்து 780 பேர் குணமடைந்து உள்ளனர். 619 பேர் உயிரிழந்து உள்ளனர்.
Next Story






