என் மலர்
செய்திகள்

தடுப்பணை
கண்ணமங்கலம் பகுதியில் பெய்த தொடர் மழையால் தடுப்பணைகள் நிரம்பின
கண்ணமங்கலம் ஏரிக்கு வரும் மேல்வல்லம் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி ஏரிக்கால்வாய் மூலம் லேசான தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் அவ்வப்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் நாகநதியில் நேற்று லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடுகிறது. மேலும் கண்ணமங்கலம் ஏரிக்கு வரும் மேல்வல்லம் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி ஏரிக்கால்வாய் மூலம் லேசான தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
இந்த மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் கொளத்தூர், மேல்நகர் ஏரிக்கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை பாசன ஆய்வாளர் முருகன் தெரிவித்தார்.
கண்ணமங்கலம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் அவ்வப்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் நாகநதியில் நேற்று லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடுகிறது. மேலும் கண்ணமங்கலம் ஏரிக்கு வரும் மேல்வல்லம் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி ஏரிக்கால்வாய் மூலம் லேசான தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
இந்த மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் கொளத்தூர், மேல்நகர் ஏரிக்கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை பாசன ஆய்வாளர் முருகன் தெரிவித்தார்.
Next Story






