search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆரணி, பெரணமல்லூரில் மணல் கடத்தி வந்த 2 பேர் கைது

    தச்சூர் ஆற்றுப்படுகைப் பகுதியில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆரணி:

    ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் ரகு மற்றும் போலீசார் நேற்று காலை ஆரணி கொசப்பாளையம் திருமலை சமுத்திரம் ஏரிக்கரை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது தச்சூர் ஆற்றுப்படுகைப் பகுதியில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    பெரணமல்லூரை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). இவர், கிராமம் அருகில் உள்ள செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தார்.

    அதேபோல் மற்றொரு நபர் தனது மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தபோது பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவல்லி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அவர்களை மடக்கினர். அதில் சீனிவாசன் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். மற்றொரு நபர் மாட்டு வண்டியை விட்டு விட்டு தப்பியோடி விட்டார். 2 மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சீனிவாசனை கைது செய்து தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×