என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    மத்திய அரசை கண்டித்து கருப்பு முக கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம்

    மத்திய அரசை கண்டித்து கருப்பு முக கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், லட்சத்தீவு மக்களின் உரிமைகளை பறிப்பதை கண்டித்தும், காஷ்மீர் மாநிலத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப வழங்கக்கோரியும், குடியுரிமை சட்ட திருத்தத்தை கைவிட வலியுறுத்தியும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை மற்றும் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்கத்தினர், மோட்டார் தொழிலாளர்கள், மின்வாரிய மத்திய அமைப்பின் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கருப்பு முக கசவம் அணிந்து மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
    Next Story
    ×