என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலூரில் சிறுமியை கடத்திய தொழிலாளி கைது

    கவுதம் மற்றும் சிறுமி சலவன்பேட்டையில் உள்ள சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு சமாதானம் பேசுவதற்கு செல்ல வேலப்பாடி பஸ்நிறுத்தம் அருகே நின்று கொண்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
    வேலூர்:

    வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், வேலூரை அடுத்த கம்மவான்பேட்டையை சேர்ந்த கவுதம் (வயது 30) என்பவர் சிறுமியை காதலித்ததும், சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் கலையரசி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கவுதம் மற்றும் சிறுமி சலவன்பேட்டையில் உள்ள சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு சமாதானம் பேசுவதற்கு செல்ல வேலப்பாடி பஸ்நிறுத்தம் அருகே நின்று கொண்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதையடுத்து அங்கு சென்ற போலீசார் கவுதமை கைது செய்தனர். சிறுமி தொரப்பாடியில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    சிறுமி கடத்தலுக்கு கவுதமுக்கு உதவிய திருவண்ணாமலை மாவட்டம் கேளூரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (20), கம்மவான்பேட்டையை சேர்ந்த தனுஷ் (20), மோத்தக்கல்லை சேர்ந்த சுரேஷ் (27) ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×