என் மலர்
செய்திகள்

விபத்து பலி
உத்தனப்பள்ளி அருகே வாகனம் மோதி விவசாயி பலி
உத்தனப்பள்ளி அருகே வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அருகே உள்ள அளேசீபத்தை சேர்ந்தவர் நவேஷ்குமார் (வயது 33). விவசாயி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டை-உத்தனப்பள்ளி சாலையில் அளேசீபம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் நவேஷ்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே நவேஷ்குமார் இறந்தார். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






