என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தளியில் ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது

    தளியில் ரவுடி கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த கும்ளாபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 30). கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இவர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் 29-ந் தேதி இரவு கும்ளாபுரம் கிராமத்தில் காரில் சென்ற போது மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக கும்ளாபுரத்தை சேர்ந்த ரவி (28), அவருடைய அண்ணன் சம்பங்கி (35) ஆகிய 2 பேரை தளி போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த அதே பகுதியை சேர்ந்த வஜ்ரமுனி (33) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
    Next Story
    ×