என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலியாகினர். புதிதாக 71 பேருக்கு தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இருப்பினும் தொற்று பாதிப்புக்கு இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து123 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 59 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவுக்கு மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் பலியாகினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 329 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story






