என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தற்கொலை தற்கொலை](https://img.maalaimalar.com/Articles/2021/Jul/202107021338314207_Tamil_News_Tamil-News-student-commit-suicide-police-investigation_SECVPF.gif)
X
தற்கொலை
காவேரிப்பட்டணம் அருகே பள்ளி மாணவி தற்கொலை- போலீசார் விசாரணை
By
மாலை மலர்2 July 2021 8:08 AM GMT (Updated: 2 July 2021 8:08 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பள்ளி மாணவி பிரியதர்சினி ஆன்லைனில் பாடம் கவனிக்காமல் செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ரஞ்சனி. இவர் தனது கணவரை 10 வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டார். தற்போது கிருஷ்ணகிரியில் குடியிருந்து வருகிறார் இவருக்கு மோகன பிரசாத் (வயது 19) என்ற மகனும், பிரியதர்சினி (14) மகளும் உள்ளனர். இதில் பிரியதர்சினி கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் காவேரிப்பட்டணம் அடுத்த சந்தாபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வந்தனர்.
அப்போது நேற்று மாலை 5 மணிக்கு பிரியதர்சினி ஆன்லைனில் பாடம் கவனிக்காமல் செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார்.
இதை கவனித்த தாய் ரஞ்சனி ஒழுங்காக படிக்கவேண்டும். செல்போனில் கேமில் அதிக நேரத்தை செலவிட வேண்டாம் என கண்டித்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த பிரியதர்சினி வீட்டில் உள்ள படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் சேலையால் தற்கொலை செய்து கொண்டார். வெகுநேரமாகியும் மகள் வராததால் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது மின்விசிறியில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பிரியதர்சினியை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். அப்போது அங்கு பரிசோதித்த டாக்டர் பிரியதர்சினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ரஞ்சனி. இவர் தனது கணவரை 10 வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டார். தற்போது கிருஷ்ணகிரியில் குடியிருந்து வருகிறார் இவருக்கு மோகன பிரசாத் (வயது 19) என்ற மகனும், பிரியதர்சினி (14) மகளும் உள்ளனர். இதில் பிரியதர்சினி கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் காவேரிப்பட்டணம் அடுத்த சந்தாபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வந்தனர்.
அப்போது நேற்று மாலை 5 மணிக்கு பிரியதர்சினி ஆன்லைனில் பாடம் கவனிக்காமல் செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார்.
இதை கவனித்த தாய் ரஞ்சனி ஒழுங்காக படிக்கவேண்டும். செல்போனில் கேமில் அதிக நேரத்தை செலவிட வேண்டாம் என கண்டித்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த பிரியதர்சினி வீட்டில் உள்ள படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் சேலையால் தற்கொலை செய்து கொண்டார். வெகுநேரமாகியும் மகள் வராததால் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது மின்விசிறியில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பிரியதர்சினியை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். அப்போது அங்கு பரிசோதித்த டாக்டர் பிரியதர்சினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)