என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம்- தமிழக அரசுக்கு கோரிக்கை
Byமாலை மலர்2 July 2021 7:14 AM GMT (Updated: 2 July 2021 7:14 AM GMT)
கடந்த ஆண்டு வெங்காயம் முழுவதும் அழுகி விட்டதால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்தனர். வெங்காயத்திற்கு காப்பீடு செய்தும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.
காரியாபட்டி:
காரியாபட்டி தாலுகா ஆவியூர், அரசகுளம், மாங்குளம், குரண்டி, மறைக்குளம், சொக்கனேந்தல், சித்தனேந்தல், முஷ்டக்குறிச்சி, தோப்பூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர். கடந்த வருடம் இந்த பகுதியில் வெங்காயம் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டது.
ஆனால் அப்போது பெய்த மழையின் காரணமாக வெங்காய பயிர்கள் முழுவதும் அழுகி எந்த மகசூலும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு ஏக்கர் வெங்காயம் பயிரிடப்பட வேண்டும் என்றால் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஒவ்வொரு விவசாயும் 5 ஏக்கர் வரை விவசாயம் செய்கின்றனர்.
கடந்த ஆண்டு வெங்காயம் முழுவதும் அழுகி விட்டதால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்தனர். வெங்காயத்திற்கு காப்பீடு செய்தும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.
இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு வெங்காய விளைச்சலை அதிகமாக்க வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரியாபட்டி தாலுகா ஆவியூர், அரசகுளம், மாங்குளம், குரண்டி, மறைக்குளம், சொக்கனேந்தல், சித்தனேந்தல், முஷ்டக்குறிச்சி, தோப்பூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர். கடந்த வருடம் இந்த பகுதியில் வெங்காயம் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டது.
ஆனால் அப்போது பெய்த மழையின் காரணமாக வெங்காய பயிர்கள் முழுவதும் அழுகி எந்த மகசூலும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு ஏக்கர் வெங்காயம் பயிரிடப்பட வேண்டும் என்றால் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஒவ்வொரு விவசாயும் 5 ஏக்கர் வரை விவசாயம் செய்கின்றனர்.
கடந்த ஆண்டு வெங்காயம் முழுவதும் அழுகி விட்டதால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்தனர். வெங்காயத்திற்கு காப்பீடு செய்தும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.
இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு வெங்காய விளைச்சலை அதிகமாக்க வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X