search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மத்தூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

    மத்தூர் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி போலீசார் சந்தை மைதானம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற அரசம்பட்டி குமரவேல் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதே போல பாரூர் போலீசார் அரசம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற அரசம்பட்டி சரவணன் (54) என்பவரை கைது செய்தனர். வேப்பனப்பள்ளி போலீசார் கொங்கனப்பள்ளி அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற வேப்பனப்பள்ளி நவாஸ் தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×