search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 125 பேருக்கு கொரோனா- 4 பேர் பலி

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் நேற்று வரை 49 ஆயிரத்து 140 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் 47 ஆயிரத்து 543 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 1,001 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 596 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
    Next Story
    ×