search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    395 பேருக்கு கொரோனா தடுப்பூசி

    ஆண்டிமடம் வட்டாரத்தில் நடைபெற்ற அனைத்து முகாம்களிலும் 395 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார சமுதாய சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட இடையக்குறிச்சி, மருதூர், வரதராஜன்பேட்டை, வாரியங்காவல், அணிகுதிச்சான் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பல்வேறு கிராமங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் வாயிலாக தினமும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சுகாதாரத்துறை குழுவினர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதன்படி கவரப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட 83 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 67 பேருக்கும் என மொத்தம் 150 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஆண்டிமடம் வட்டாரத்தில் நடைபெற்ற அனைத்து முகாம்களிலும் 395 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
    Next Story
    ×