என் மலர்
செய்திகள்

விபத்து பலி
கல்லாவி அருகே விபத்தில் தொழிலாளி பலி
கல்லாவி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி:
கல்லாவி அருகே உள்ள வேலம்பட்டியை சேர்ந்தவர் சபரிமுத்து (வயது 47). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று அவர் ஸ்கூட்டரில், கல்லாவியில் இருந்து மொரப்பூர் செல்லும் சாலையில் வேலம்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சபரிமுத்து இறந்தார். இது குறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






