என் மலர்
செய்திகள்

கிணற்றில் தீயணைப்புத் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.
திருவண்ணாமலை அருகே குடிபோதையில் 2 வாலிபர்கள் கிணற்றில் மூழ்கி பலி
பிரபாகரன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் கிணற்றில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. அவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கல்நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29). இவரும், திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த அப்பு என்ற வெங்கடேசன் (21) என்பவரும் திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் உண்டு. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் மது குடிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளனர். நேற்று காலை வரை அவர்கள் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்களது குடும்பத்தினர் பிரபாகரனையும், வெங்கடேசனையும் பல இடத்தில் தேடியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவலூர்பேட்டை சாலை பச்சையப்பன் நகரில் உள்ள விவசாய கிணற்றின் அருகில் பிரபாகரனின் மோட்டார் சைக்கிள் நின்று உள்ளது. இதனால் அவர்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது பிரபாகரன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் கிணற்றில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. அவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
2 பேரின் உடல்களும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், வெங்கடேசனுக்கு நீச்சல் தெரியும் என்றும், குடிபோதையில் பிரபாகரன் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம். அவரை காப்பற்ற வெங்கடேசன் கிணற்றில் இறங்கியதில் 2 பேரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை கல்நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29). இவரும், திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த அப்பு என்ற வெங்கடேசன் (21) என்பவரும் திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் உண்டு. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் மது குடிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளனர். நேற்று காலை வரை அவர்கள் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்களது குடும்பத்தினர் பிரபாகரனையும், வெங்கடேசனையும் பல இடத்தில் தேடியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவலூர்பேட்டை சாலை பச்சையப்பன் நகரில் உள்ள விவசாய கிணற்றின் அருகில் பிரபாகரனின் மோட்டார் சைக்கிள் நின்று உள்ளது. இதனால் அவர்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது பிரபாகரன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் கிணற்றில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. அவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
2 பேரின் உடல்களும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், வெங்கடேசனுக்கு நீச்சல் தெரியும் என்றும், குடிபோதையில் பிரபாகரன் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம். அவரை காப்பற்ற வெங்கடேசன் கிணற்றில் இறங்கியதில் 2 பேரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






