என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஈரோட்டில் மது விற்ற 2 பேர் கைது

    ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியில் நின்று கொண்டு மது விற்ற, முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் பி.பி.அக்ரஹாரம் பூம்புகார் நகர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு மது விற்ற அதே பகுதியை சேர்ந்த நேரு (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியில் நின்று கொண்டு மது விற்ற, முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் (23) என்பவரை சூரம்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 8 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


    Next Story
    ×