search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருமண ஆசைக்காட்டி மாணவியை கர்ப்பிணியாக்கிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

    திருவண்ணாமலையில் திருமண ஆசைக்காட்டி மாணவியை கர்ப்பிணியாக்கிய ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் செயல்பட்டுவரும் ஒரு தனியார் பள்ளியில் கடந்த 2018-ம் ஆண்டு ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வெங்கடேசன் (வயது 31). அவர் பணியில் இருந்த போது அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் பள்ளி நிர்வாகம் அவரை திடீரென வேலையில் இருந்து நீக்கியது. இருந்தபோதிலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர், அந்த மாணவியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற ஆசிரியர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    பின்னர் இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று எச்சரித்து விட்டு சென்றுவிட்டார். தகாத உறவினால் தற்போது 6 மாத கர்ப்பிணியான மாணவி மன உளைச்சலில் தவித்து வந்தார்.

    பின்னர் தனது பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் நேற்று திருவண்ணாமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.

    அதில் குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து அவர்மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    ஆசிரியர் வெங்கடேசனுக்கு கடந்த ஆண்டுதான் திருமணமாகி உள்ளது. அதனை அவர் மறைத்து மாணவியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து அவரை பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    Next Story
    ×