என் மலர்
செய்திகள்

விபத்து பலி
ஆரணியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெயிண்டர் பலி
ஆரணியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி கொசப்பாளையம் சின்னச்சாயக்காரத் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 53). இவர், கோவில் சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் ஆரணி மண்டி வீதியில் சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






