search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய 150 பேருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்

    முக கவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு அபராதமாக தலா ரூ.200 வீதம் ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டது.
    பெருந்துறை:

    பெருந்துறை நகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையிலான போலீசார் நேற்று மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவசியமின்றி இரு சக்கர வாகனங்களில் ரோட்டில் சுற்றிக்கொண்டிருந்த 50 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு தலா ரூ.500 வீதம், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    அதேபோல் முக கவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு அபராதமாக தலா ரூ.200 வீதம் ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டது. இது தவிர ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்த 50 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டது. பெருந்துறை நகரில் நேற்று நடந்த வாகன சோதனையில் கொரோனா தடுப்பு விதிமுறையை மீறியதாக 150 பேருக்கு மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×