search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

    தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 4 நாட்களாக வயிற்று வலி காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை தனது மனைவி மகேஸ்வரியிடம் வேலைக்கு செல்வதாகச் சொல்லி சென்று விட்டார். மகேஸ்வரியும் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வருவதால் அவரும் வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று மதியம் மகேஸ்வரி வீடு திரும்பியபோது வீடு உள் பக்கமாக பூட்டி இருந்தது. அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது லட்சுமணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு மகேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×