search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஊஞ்சலூர் பகுதியில் சிறுமி உள்பட 14 பேருக்கு கொரோனா

    கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.
    ஊஞ்சலூர்:

    ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கொரோனா தொற்று அதிகமாக பரவி காணப்படுகிறது. ஊஞ்சலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட தெற்கு தெருவில் 64 வயது மூதாட்டி, மாரியம்மன் கோவில் வீதியில் 60 வயது மூதாட்டி, மணிமுத்தூரில் 30 வயது ஆண் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொளாநல்லி பகுதியில் 26 வயது வாலிபர், 19 வயது வாலிபர், கிளாம்பாடி பேரூராட்சிக்கு உள்பட்ட மலையம்பாளையம் பகுதியில் 65 வயது மூதாட்டி, 65 வயது முதியவர், 75 வயது முதியவர் ஆகியோருக்கும், வட்டக்கல்வலசில் 75 வயது மூதாட்டி, 52 வயது ஆண் ஆகியோருக்கும், பாசூரில் 31 வயது பெண், 30 வயது வாலிபர் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    கொந்தளம் ஊராட்சிக்கு உள்பட்ட முத்தையன் வலசில் 32 வயது பெண், கொளத்துப்பாளையம் ஊராட்சி தேவம்பாளையத்தில் 17 வயது சிறுமிக்கும் கொரோனா உறுதியானது. எனவே ஊஞ்சலூர், கொளாநல்லி, கிளாம்பாடி, பாசூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 14 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள். கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.
    Next Story
    ×