search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை
    X
    யானை

    குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றி திரியும் 2 யானைகள்

    குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர். நகர் பகுதியில் 2 யானைகள் நடந்து சென்றன. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் சிறிது நேரம் வரிசையாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி சமவெளிப் பகுதிகளில் இருந்து வனப்பகுதிகளுக்கு காட்டு யானைகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக குன்னூர்- மேட்டுப் பாளையம் சாலையோரத்தில் காட்டு யானைகள் அதிக அளவில் உலா வருகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது சாலையை கடந்து செல்வதால் சில சமயங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர். நகர் பகுதியில் 2 யானைகள் நடந்து சென்றன. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் சிறிது நேரம் வரிசையாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    இதுகுறித்து, வனத்துறையினர் கூறும்போது, ‘‘உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது யானைகள் சாலையை கடந்து செல்கின்றன. அப்போது யாரும் யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது. யானைகளை கண்டால் வனத் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும், வன விலங்குகளை சாலைகளில் கண்டால், அவற்றை புகைப்படப் எடுக்கக் கூடாது’’ என்றனர்.

    Next Story
    ×