search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவால் சிங்கங்கள் பாதிப்பு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானைகள் கண்காணிப்பு

    கடம்பூர் உள்ளிட்ட 10 வனசரகங்களில் கண்காணிப்பு குழுவினர் வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களில் தென்படும் யானை,சிறுத்தை,புலிகள் குறித்த கண்காணித்து வருகின்றனர்.

    தாளவாடி:

    சென்னை வண்டலூர் வனஉயிரின பூங்காவில் கொரோனா தொற்று பாதிப்பால் 2 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன. மேலும் 5 சிங்கங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து தமிழகத்தில் உள்ள சரணாலயங்கள், புலிகள் காப்பகங்களில் உள்ள சிறுத்தை, புலி, யானைகள் போன்ற விலங்குகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனவா? என கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி 1485 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வாழும் காட்டுவிலங்குகளை கண்காணிக்க, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் கிருபா சங்கர் தலைமையில் கால்நடை மருத்துவர், உதவி வனப் பாதுகாவலர், வனச்சரக அலுவலர், வனவர் மற்றும் வனக்காப்பாளர் என 6 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சத்தியமங்கலம், பவானி சாகர், ஜீரஹள்ளி, தலமலை, தாளவாடி, கேர்மாளம், கடம்பூர் உள்ளிட்ட 10 வனசரகங்களில் கண்காணிப்பு குழுவினர் வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களில் தென்படும் யானை,சிறுத்தை,புலிகள் குறித்த கண்காணித்து வருகின்றனர்.

    அதில் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றிய நிலையில் சுற்றுகிறதா? என்பது குறித்து கண்காணிப்பு குழுவினர் ஆடு, மாடு மேய்க்கும் பழங்குடியினரிடம் விசாரித்து வருகின்றனர்.

    இரு மாநில எல்லையில் தினந்தோறும் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசுக்கு வனத்துறை சமர்ப்பித்து வருகின்றனர்.

    Next Story
    ×