search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விருத்தாசலம் அருகே சாராயம் விற்ற முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கைது

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாராயம் விற்ற முன்னாள் பஞ்சாயத்து தலைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றினர்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே வேப்பூர் போலீஸ் சரகம் கோவிந்தசாமி (வயது 51). இவர் சேப்பாக்கம் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவர் வேப்பூர் சேப்பாக்கம் எல்லையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வேப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திகணேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கோவிந்தசாமியை கைது செய்தனர். அவரிடம் 20 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றினர்.

    Next Story
    ×