search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கர்நாடகாவில் இருந்து கோத்தகிரிக்கு லாரியில் மது கடத்தல்- டிரைவர் கைது

    கர்நாடகாவில் இருந்து கோத்தகிரிக்கு லாரியில் மது கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை சோதனை சாவடியில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூடலூர் அனுமாபுரத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 32) என்பதும், கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ் குமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 69 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×