search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

    சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் உள்ளிட்ட போலீசார் நேற்று குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில்சாராய சோதனை நடத்தினர். அப்போது சாராயம் விற்றுக் கொண்டிருந்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் (வயது 22), கூடநகரம் கிராமத்தைச் சேர்ந்த வசந்த் (30), மேல்ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அம்முராஜகுமாரி (29) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
    Next Story
    ×