என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலக பெண் ஊழியர் கொரோனாவுக்கு பலி
மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலக பெண் ஊழியர் கொரோனாவுக்கு பலியானார்.
கடலூர்:
காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண். இவர் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு மருத்துவ பணியாளராக பணியாற்றி வந்தார். தற்போது அவர் கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் தற்காலிக ஊழியரான அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
இதன் பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றிய தற்காலிக ஊழியர் ஒருவர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Next Story






