என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பணியாற்றிய நர்சு கொரோனாவுக்கு பலி
Byமாலை மலர்8 Jun 2021 9:02 AM GMT (Updated: 8 Jun 2021 9:02 AM GMT)
வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பணியாற்றிய நர்சு கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் ஆரூண் சுந்தர்ராஜ். இவருடைய மனைவி சாந்தகுமாரி (வயது51). வேலூர் பென்ட்லேன்ட் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் நர்சாக பணியாற்றி வந்தார்.
கடந்த 14-ந்தேதி சாந்தகுமாரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பென்ட்லேன்ட் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சாந்தகுமாரி பரிதாபமாக இறந்தார்.
சாந்தகுமாரியின் சொந்த ஊர் திருத்தணி ஆகும். இறந்த நர்சு சாந்தகுமாரிக்கு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நர்சுகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே குடியாத்தம், அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய 2 நர்சுகள் இறந்தனர். 3-வதாக சாந்தகுமாரி பலியாகி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X