search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று

    பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 9,643 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 7,611 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவிற்கு பலியானோர் பட்டியலுடன் நுரையீரல் நிமோனியா தொற்றால் மே, ஜூன் மாதங்களில் உயிரிழந்த 5 பேரின் எண்ணிக்கை சேர்க்கப்பட்டதால் உயிரிழப்பு 109 ஆக உயர்ந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 69 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 38 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 21 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 12 பேர் என மொத்தம் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 1,923 பேரில் 1,482 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளில் தனிமைப்படுத்தியும் வைக்கப்பட்டுள்ளனர். 441 பேர் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×