என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவினால் இறந்தவர்களின் விவரம் சேகரிக்கும் பணி தீவிரம்
Byமாலை மலர்5 Jun 2021 10:50 AM GMT (Updated: 5 Jun 2021 10:50 AM GMT)
வேலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம், சமூக நலத்துறை, புள்ளியியல் துறை மற்றும் வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் கள அளவில் புள்ளி விவரங்களை சேகரிப்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு, தற்போது அப்பணி நடந்து வருகிறது.
வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பார்த்திபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மற்றும் கொரோனா தொற்றினால் பெற்றோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் சமூக, பொருளாதார மற்றும் குடும்ப விவரங்களை சேகரிக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம், சமூக நலத்துறை, புள்ளியியல் துறை மற்றும் வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் கள அளவில் புள்ளி விவரங்களை சேகரிப்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு, தற்போது அப்பணி நடந்து வருகிறது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 660 பேரின் விவரங்களும் மற்றும் கொரோனா தொற்றால் பெற்றோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் விவரங்களும் தொலைபேசி வாயிலாகவும், தேவைப்படும் பட்சத்தில் வீட்டுக்கே சென்றும் அவர்களது விவரங்களை அரசு அலுவலர்களால் சேகரிக்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் தங்களது விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ கேட்கும் பட்சத்தில் அவற்றை வழங்க வேண்டும். அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பார்த்திபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மற்றும் கொரோனா தொற்றினால் பெற்றோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் சமூக, பொருளாதார மற்றும் குடும்ப விவரங்களை சேகரிக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம், சமூக நலத்துறை, புள்ளியியல் துறை மற்றும் வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் கள அளவில் புள்ளி விவரங்களை சேகரிப்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு, தற்போது அப்பணி நடந்து வருகிறது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 660 பேரின் விவரங்களும் மற்றும் கொரோனா தொற்றால் பெற்றோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் விவரங்களும் தொலைபேசி வாயிலாகவும், தேவைப்படும் பட்சத்தில் வீட்டுக்கே சென்றும் அவர்களது விவரங்களை அரசு அலுவலர்களால் சேகரிக்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் தங்களது விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ கேட்கும் பட்சத்தில் அவற்றை வழங்க வேண்டும். அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X