என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் 150 பேருக்கு கொரோனா தடுப்பூசி

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகம் சார்பில் பஸ் நிலையம் அருகே உள்ள உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா தொற்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகம் சார்பில் பஸ் நிலையம் அருகே உள்ள உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா தொற்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் மேற்பார்வையில் மருத்துவ பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். இந்த முகாமில் 18 வயதுக்கு மேல் 44 வயது வரையுள்ள 130 பேரும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20 பேரும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முக கவசம் அணிந்தும் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
    Next Story
    ×