என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் 94 வாகனங்கள் பறிமுதல்

    ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு 94 வழக்குகள் பதிவு செய்து, அவர்களிடம் இருந்து 94 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாஸ்கரன் மேற்பார்வையில் மாவட்டத்தில் போலீசார், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு 94 வழக்குகள் பதிவு செய்து, அவர்களிடம் இருந்து 94 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்த 81 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    Next Story
    ×