search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

    லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வெங்கடேசனிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அதை கிராம நிர்வாக அலுவரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பொன்னை கிராம நிர்வாக அலுவலராக கவிதா (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் பொன்னை பஜார் தெருவை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் (50) என்பவர் தன்னுடைய நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் கவிதா ரூ.10,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.

    லஞ்சம் தர விரும்பாத வெங்கடேசன் இதுகுறித்து வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் வெங்கடேசனிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அதை கிராம நிர்வாக அலுவரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். அதன்படி நேற்று பொன்னையில் கிராம நிர்வாக அலுவலர் கவிதாவிடம், வெங்கடேசன் கொடுத்துள்ளார்.

    அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கவிதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து லஞ்ச பணம் ரூ.10 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×