search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நீலகிரியில் ஒரே நாளில் 579 பேருக்கு கொரோனா

    நீலகிரியில் நேற்று ஒரே நாளில் 579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 20,241 ஆக அதிகரித்துள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு எண்ணிக்கை 500-யை கடந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 20,241 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் 460 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து எண்ணிக்கை 16,073 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஊட்டி அரசு ஆஸ்பத்திரி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் 4,068 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்ததை அடுத்து எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×