என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவதால் ஆஸ்பத்திரிகளில் காலியாகும் வார்டுகள்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 42,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,827 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 999 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 751 பேர் பலியாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று 304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 326 பேர் பாதிக்கப்பட்டனர். இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் 150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு மேலும் படுக்கைகள் காலியாகி வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 5 ஆயிரத்து 187 படுக்கைகள் உள்ளன. மேலும் 383 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,500 க்கும் அதிகமான படுக்கைகள் காலியாக உள்ளன.
ஆனால் இறப்பு விகிதம் குறையவில்லை நேற்று ஒரே நாளில் 14 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதேபோல தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது ஆக்சிஜன் படுக்கை காலியாக உள்ளன.
பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மற்றும் ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் உள்ளவர்கள் காட்பாடி விஐடி மற்றும் வேலூர் தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை முகாமில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். முழு ஊரடங்கின் பலனாக பாதிப்பு குறைந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்