என் மலர்
செய்திகள்

வழக்கு பதிவு
மாத்தூர், ஆவூரில் ஊரடங்கு தடையை மீறிய 17 பேர் மீது வழக்குப்பதிவு
மாத்தூர், ஆவூரில் ஊரடங்கு தடையை மீறிய 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:
மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், யோகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாத்தூர், ஆவூர், ஆம்பூர்பட்டி நால்ரோடு ஆகிய பகுதிகளில் ஊரடங்கு தடையை மீறி அவசியமின்றி மோட்டார் சைக்கிளில் சென்றது, முக கவசம் அணியாமல் சென்றது மற்றும் அனுமதியின்றி மாத்தூரில் சந்தைக்கடை வைத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story






