என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
ரெயில்வே போலீசார் சார்பில் ஆதரவற்றோர்களுக்கு நிவாரண பொருட்கள்
ராமேசுவரம், காரைக்குடி ஆகிய ரெயில் நிலைங்களை சேர்ந்த போலீசார் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி தொகுப்பு உள்ளிட்டவைகளை வழங்கினர்.
மானாமதுரை:
காரைக்குடி தாலுகாவை சேர்ந்த மானாமதுரை, ராமேசுவரம், காரைக்குடி ஆகிய ரெயில் நிலைங்களை சேர்ந்த போலீசார் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி தொகுப்பு உள்ளிட்டவைகளை வழங்கினர். மானாமதுரை ஹோலிகிராஸ் முதியோர் இல்லம், சுந்தர நடப்பு கருணாலயா மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். இதில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர்கள் நாச்சி, தனுஷ்கோடி, துரை, முத்து, முனியசாமி, சவுந்தரபாண்டி, ராஜ ராசன், ராஜேஷ் கண்ணன், தனிபிரிவு தலைமை ஏட்டு ராஜ்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Next Story






