search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வேதாரண்யம் அருகே வயலில் உழுதபோது டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

    வேதாரண்யம் அருகே வயலில் உழுதபோது டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் பகுதியில் உள்ள வடமலை மணக்காடு கிராமம் நோச்சி கோட்டத்தில் உள்ள தன்னுடைய வயலை கோடை உழவு செய்ய வடமலை மனக்காட்டில் உள்ள ஒரு தனியாரிடமிருந்து டிராக்டரை வாடகைக்கு எடுத்துச் சென்று நேற்று மதியம் உழவு செய்து கொண்டிருந்தார்.

    அப்போது டிராக்டர் கவிழ்ந்து விழுந்ததில் டிராக்டர் ஓட்டிச் சென்ற தகட்டூர் கிராமம் சாக்காடு பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் மகன் கலியமூர்த்தி (வயது 28) என்பவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரியாப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து பின்பு மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லெனின் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×