என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
அந்தியூரில் கடந்த 4 நாட்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்- மனைவி உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி
கூட்டு குடும்பமாக வசித்த 5 பேரும் கொரோனா தொற்றால் கடந்த 4 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்தியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த 52 வயது ஆண் மற்றும் அவருடைய 47 வயது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் கணவன்- மனைவி இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் 2 பேரும் நேற்று பரிதாபமாக இறந்தனர்.
ஏற்கனவே நேற்று முன்தினம் அந்த ஆணின் தாயும், அவருடைய சித்தப்பா, சித்தி ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனாவுக்கு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டு குடும்பமாக வசித்த அவர்கள் 5 பேரும் கடந்த 4 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்தியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த 52 வயது ஆண் மற்றும் அவருடைய 47 வயது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் கணவன்- மனைவி இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் 2 பேரும் நேற்று பரிதாபமாக இறந்தனர்.
ஏற்கனவே நேற்று முன்தினம் அந்த ஆணின் தாயும், அவருடைய சித்தப்பா, சித்தி ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனாவுக்கு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டு குடும்பமாக வசித்த அவர்கள் 5 பேரும் கடந்த 4 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்தியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






