என் மலர்
செய்திகள்

60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா - குன்னூர் தூதூர்மட்டம் கிராமத்தில் 5 நாட்கள் முழு ஊரடங்கு
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 300-க்கும் அதிகமானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.குன்னூர் அடுத்த கொலக்கெம்பை அருகே உள்ளது தூதூர்மட்டம் கிராமம். இந்த பகுதியில் வட மாநிலத் தவர்கள், உள்ளூர்காரர்கள் என ஏராளமனோர் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதி தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதி என்பதால் மக்கள் அனைவரும் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் விரைந்து வந்து அந்த பகுதியை சேர்ந்த மற்றவர்களுக்கும் பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.
மேலும் அந்த கிராமத்தில் சுகாதார பணிகள் மேற்கொண்டு தடுப்புகள் வைத்து அடைத்து அங்கு 5 நாட்கள் முழு ஊரடங் கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் வெளியில் வரவும், வெளியாட்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள எஸ்டேட்டில் தேயிலை தொழிலை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.






