என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று- தனியார் தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டன
தேயிலை தோட்டப்பணிகள் நிறுத்தப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொடர்ந்து தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனையையும் சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னூர்:
குன்னூர் அருகே கிரேக் மோர், உட்லண்ட்ஸ், மானார் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களும், 4 தொழிற்சாலைகளும் உள்ளன. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 30 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை தேயிலை தோட்டங்களில் இலை பறித்தல் போன்ற பணிகளையும், தொழிற்சாலைகள் இயங்குவதையும் நிறுத்தி வைக்க சுகாதார துறையினர் அறிவுரை வழங்கினர். அதன்படி தேயிலை தோட்டப்பணிகள் நிறுத்தப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொடர்ந்து தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனையையும் சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னூர் அருகே கிரேக் மோர், உட்லண்ட்ஸ், மானார் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களும், 4 தொழிற்சாலைகளும் உள்ளன. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 30 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை தேயிலை தோட்டங்களில் இலை பறித்தல் போன்ற பணிகளையும், தொழிற்சாலைகள் இயங்குவதையும் நிறுத்தி வைக்க சுகாதார துறையினர் அறிவுரை வழங்கினர். அதன்படி தேயிலை தோட்டப்பணிகள் நிறுத்தப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொடர்ந்து தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனையையும் சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






