என் மலர்
செய்திகள்

காய்கறிகள்
தினசரி காய்கறி மார்க்கெட் வாரச்சந்தைக்கு மாற்றம்
நகர் பகுதியிலும், சந்தை பகுதியிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கொரோனா விதிமுறைகளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
இளையான்குடி:
இளையான்குடியில் தினசரி காய்கறி மற்றும் பழங்கள் விற்பதற்காக பஸ் நிலையம் அருகிலுள்ள பூங்காவில் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு நாட்களாக வியாபாரம் நடந்து வருகின்றது. இதில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதனால் நேற்று தாலுகா அலுவலகம் வருகை தந்த எம்.எல்.ஏ. தமிழரசி மற்றும் அதிகாரிகள் ஆலோசனை செய்து வாரச் சந்தை நடைபெறும் இடத்திற்கு மாற்றம் செய்வதாக பொதுமக்கள் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.
இதனால் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வதும் மீன் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. முதல்நாள் வருபவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், புதிய நபர்களுக்கு அடுத்த நாட்களில் அனுமதி இல்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே முதல்நாளிலேயே வியாபாரிகள் தாங்கள் விற்பனை செய்யும் இடத்தை தேர்வு செய்து வியாபாரம் செய்து கொள்ள அனுமதிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்யை பயன்படுத்தி சந்தையில் கொரோனா கால சிறப்பு விற்பனைக்கு வருகை தரும்படி வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊருக்குள் உள்ள கடைகள் ஆங்காங்கே அவர்களின் இடத்தில் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மேலும் நகர் பகுதியிலும், சந்தை பகுதியிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கொரோனா விதிமுறைகளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகின்றது.
இளையான்குடியில் தினசரி காய்கறி மற்றும் பழங்கள் விற்பதற்காக பஸ் நிலையம் அருகிலுள்ள பூங்காவில் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு நாட்களாக வியாபாரம் நடந்து வருகின்றது. இதில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதனால் நேற்று தாலுகா அலுவலகம் வருகை தந்த எம்.எல்.ஏ. தமிழரசி மற்றும் அதிகாரிகள் ஆலோசனை செய்து வாரச் சந்தை நடைபெறும் இடத்திற்கு மாற்றம் செய்வதாக பொதுமக்கள் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.
இதனால் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வதும் மீன் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. முதல்நாள் வருபவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், புதிய நபர்களுக்கு அடுத்த நாட்களில் அனுமதி இல்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே முதல்நாளிலேயே வியாபாரிகள் தாங்கள் விற்பனை செய்யும் இடத்தை தேர்வு செய்து வியாபாரம் செய்து கொள்ள அனுமதிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்யை பயன்படுத்தி சந்தையில் கொரோனா கால சிறப்பு விற்பனைக்கு வருகை தரும்படி வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊருக்குள் உள்ள கடைகள் ஆங்காங்கே அவர்களின் இடத்தில் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மேலும் நகர் பகுதியிலும், சந்தை பகுதியிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கொரோனா விதிமுறைகளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகின்றது.
Next Story






