search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கல்லலில் கொரோனா தடுப்பூசி முகாம்

    கல்லல் நகரில் கொரானா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்த வேண்டும்.
    கல்லல்:

    கல்லல் நகரில் கொரானா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்த வேண்டும். தடுப்பூசி போட வேண்டும் என தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று கல்லல் ஊராட்சி அலுவலகம் முன்பு கல்லல் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் டாக்டர் அகல்யா தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் கொண்ட முகாம் நடைபெற்றது. முதல் நாளே ஊராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு ஆட்டோ மூலம் கொரோனா பரிசோதனை முகாம், தடுப்பூசி முகாம் குறித்து ஒலிப்பெருக்கி மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முகாமிற்கு போதிய பொதுமக்கள் வரவில்லை. 10 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டப்பட்டது. 20-க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

    இது தொடர்ந்து நேற்று நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடம் பெரிய அளவு வரவேற்பு இல்லை 10 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது 20க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கல்லல் பகுதியில் தடுப்பூசி குறித்தும் பரிசோதனை குறித்தும் பொதுமக்களிடம் இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
    Next Story
    ×