என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழ்வேளூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்18 May 2021 1:16 PM GMT (Updated: 18 May 2021 1:16 PM GMT)
இலுப்பூர், பட்டமங்கலம், வடக்காலத்தூர் பகுதிகளை சேர்ந்த 45 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே இலுப்பூர் சத்திரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு நாகை ஊரக வளர்ச்சி துறை உதவி திட்ட அலுவலர் குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் இலுப்பூர், பட்டமங்கலம், வடக்காலத்தூர் பகுதிகளை சேர்ந்த 45 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் தேவூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரபு, செவிலியர் மல்லிகா. மருந்தாளுனர் காஞ்சனா, சுகாதாரத்துறை பணியாளர்கள், துணை. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபால் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் வணிக நிறுவனங்கள் வைத்துள்ளவர்களுக்கு நகராட்சியும், வர்த்தக சங்கமும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது. வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்ற முகாமை வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு தொடங்கி வைத்தார். முகாமில் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, ஆய்வாளர் வெங்கடாசலம், டாக்டர்கள் ராஜசேகர், சுந்தர்ராஜன் சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X