என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 33 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்18 May 2021 1:04 PM GMT (Updated: 18 May 2021 1:04 PM GMT)
நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து 10 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.மேலும் கட்டுப்பாடுகளை தீவிர படுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது போலீஸ் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் முழு ஊரடங்கின் போது போலீசார் சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செல்வோரை அனுமதித்தனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுவரை 24 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X