search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சிங்கம்புணரியில் சிறுவன் உள்பட 10 பேருக்கு கொரோனா

    காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருந்தால் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டு டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் நேற்று மட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கம்புணரி காசிப்பிள்ளை நகர், பண்டாரம் காலனி, பாரதி நகர், வடக்கு தெரு, அழகப்பா காலனி, என்பில்டு காலனி, மற்றும் வி.எஸ்.எஸ்.காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 6 வயது சிறுவன் ஒருவனும் பாதிக்கப்பட்டு உள்ளான். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கொரோனா பரவலை தடுக்க வருவாய்த்துறையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அத்தியவசிய தேவைகள் இன்றி வெளியே வரக்கூடாது. வீட்டிற்குள்ளேயே தங்களை தாங்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருந்தால் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டு டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    Next Story
    ×