என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்கம்புணரியில் சிறுவன் உள்பட 10 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்17 May 2021 12:56 PM GMT (Updated: 17 May 2021 12:56 PM GMT)
காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருந்தால் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டு டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் நேற்று மட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கம்புணரி காசிப்பிள்ளை நகர், பண்டாரம் காலனி, பாரதி நகர், வடக்கு தெரு, அழகப்பா காலனி, என்பில்டு காலனி, மற்றும் வி.எஸ்.எஸ்.காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 6 வயது சிறுவன் ஒருவனும் பாதிக்கப்பட்டு உள்ளான். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனா பரவலை தடுக்க வருவாய்த்துறையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அத்தியவசிய தேவைகள் இன்றி வெளியே வரக்கூடாது. வீட்டிற்குள்ளேயே தங்களை தாங்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருந்தால் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டு டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X