search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    உத்திரமேரூர் அருகே இளம்பெண் தற்கொலை

    உத்திரமேரூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் அடுத்த அரசாணி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத். இவருக்கும் அதே கிராமம் நியூ பாரதி நகரை சேர்ந்த ஹரிதா வயது 20 என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. கர்ப்பிணியான ஹரிதாவுக்கு கரு கலைந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த ஹரிதா வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டு விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இவரை உடனடியாக உத்திரமேரூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தாம்பரம் இந்து மிஷன் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஹரிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. திருமணமாகி 4 மாதங்கள் ஆவதால் இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
    Next Story
    ×