என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
காயல்பட்டினத்தில் உள்ள ஒரு வீட்டில் முஸ்லிம்கள் ரம்ஜான் தொழுகை நடத்தியபோது எடுத்த படம்.
காயல்பட்டினத்தில் வீடுகளில் ரம்ஜான் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
By
மாலை மலர்14 May 2021 11:36 PM GMT (Updated: 14 May 2021 11:36 PM GMT)

காயல்பட்டினத்தில் வீடுகளில் முஸ்லிம்கள் ரம்ஜான் தொழுகை நடத்தினர்.
ஆறுமுகநேரி:
தமிழகமெங்கும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் காயல்பட்டினத்தில் அதிகமாக வாழும் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களிலும் மற்றும் காயல்பட்டணம் கடற்கரையிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம்.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் கடந்த ஆண்டு கொரோனாவின் தொடக்க காலமாக இருந்ததால் கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெறவில்லை.
இந்த ஆண்டாவது கடற்கரையில் தொழுகை நடைபெறும் என்று இஸ்லாமியர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை கடற்கரையில் நடைபெறவில்லை. மாறாக அவரவர் இல்லங்களிலேயே உறவினருடன் ரம்ஜான் சிறப்பு தொழுகையை நடத்தினர்.
காயல்பட்டினம் கொச்சியார் தெருவில் ஒரு வீட்டில் அந்த வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களுடன் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர்.
இந்த தொழுகையினை காயல்பட்டினம் குருவித்துறை பள்ளிவாசல் இமாம் மௌலவி ஜாபர் சாதிக் நடத்தினார். இதில் குறிப்பிட்ட சிலர் சமூக இடை வெளி மற்றும் முக கவசம் அணிந்து இந்த தொழுகையில் கலந்து கொண்டனர்.
தொழுகைக்குப் பின்பு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதுபோல் காயல்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் இதுபோன்று தொழுகைகள் அவரவர் இல்லங்களில் சொந்தங்கள், உறவினர்களோடு நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
