என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போளூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - வருவாய் கோட்டாட்சியர் விசாரணை
Byமாலை மலர்13 May 2021 6:01 PM GMT (Updated: 13 May 2021 6:01 PM GMT)
போளூர் அருகே இளம்பெண் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போளூர்:
போளூரை அடுத்த திருசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், கட்டிட மேஸ்திரி. இவருக்கும், போளூரை அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகள் திலகவதிக்கும் (22) 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தை இல்லை. ராஜேந்திரன் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இவர் பலரிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜேந்திரனை வேலைக்கு செல்லுமாறு திலகவதி கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், திலகவதியிடம் உன் தாய் வீட்டுக்குச் சென்று பணம் வாங்கி வா எனக் கூறினார்.
அதில் மனமுடைந்த திலகவதி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திலகவதியின் தாயார் சங்கீதா, தனது மகள் சாவில் சந்தேகம் இருக்கிறது, எனக் கூறி போளூர் போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் செய்தார்.
போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், சப்-இன்ஸ்பெக்டர் தரணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் விசாரணை நடத்தி வருகிறார்.
போளூரை அடுத்த திருசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், கட்டிட மேஸ்திரி. இவருக்கும், போளூரை அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகள் திலகவதிக்கும் (22) 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தை இல்லை. ராஜேந்திரன் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இவர் பலரிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜேந்திரனை வேலைக்கு செல்லுமாறு திலகவதி கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், திலகவதியிடம் உன் தாய் வீட்டுக்குச் சென்று பணம் வாங்கி வா எனக் கூறினார்.
அதில் மனமுடைந்த திலகவதி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திலகவதியின் தாயார் சங்கீதா, தனது மகள் சாவில் சந்தேகம் இருக்கிறது, எனக் கூறி போளூர் போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் செய்தார்.
போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், சப்-இன்ஸ்பெக்டர் தரணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X